News in Tamil

News in Tamil »

[13 May 2009 | Comments Off | ]

1) சுற்றி நின்று கொல்லுகிறான்…..

சுற்றி நின்று கொல்லுகிறான்
சூழ்ந்து நின்று கொழுத்துகிறான்
சற்றேனும் இரக்கமின்றி;ச்
செல்லு குண்டைக் கொட்டுகிறான்
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி    கண்ணீரைச் சொரியுது!

புற்றிலுள்ள பாம்போடு நம்முறவு பதுங்குது!
போக இடம் தெரியாமற் போய் விழுந்து கதறுது!
பெற்றவர்கள் படும் பாட்டைப் பேச முடியல்லை!
பேசாமைப் படுப்பதற்கும் மனசு கே ட்கல்லை!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!

கெட்டவ்ர்கள் பூமியிது!
கேட்பதற்கும் மனுசரில்லை!
சட்டங்களைப் போட்டு எம்மை;ச்
சவமாக மாத்திறார்!
சுட்டெரிக்க நம்ம சனம் சாகுது! ஓன்றும்
செய்ய முடியாமை மனம் வேகுது!
பற்றி யெங்கள் நெஞ்சமெல்லாம் எரியுது! – எங்கள்
பாசவிழி கண்ணீரைச் சொரியுது!

கட்டுக்கடங்காது துயர் காட்டுவெள்ளமாகுது
கைகொடுக்கஉலகம்தடைபோடுது!
நித்திரையில் நெஞ்சு கனமாகுது!
விட்டு விடமுடியாது தோழரே! நாங்கள்
விண்ணதிரக் கத்த வேண்டும் தோழரே! உண்மை
வெல்லும்வரை உழைக்க வேண்டும் !தோழரே!

2) உலகே ஒருகணம் எங்கள் முன் நில்லு!…

உலகே ஒருகணம் [...]